“பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வராது” புதிய ஆய்வில் தகவல்
வாஷிங்டன், நவ. 22-2010
நமது அன்றாட உணவில் சிறிதளவு காய்கறிகள் மற்றும் பழவகைகளை சேர்த்து வந்தால் புற்றுநோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் 10 ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.
எனவே அவர்கள் தங்கள் உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
வாஷிங்டன், நவ. 22-2010
நமது அன்றாட உணவில் சிறிதளவு காய்கறிகள் மற்றும் பழவகைகளை சேர்த்து வந்தால் புற்றுநோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் 10 ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.
எனவே அவர்கள் தங்கள் உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
நன்றி: தினமலர் நாளிதழ்.