இயற்கை எப்படி நீர்,நிலம்,வாயு,அக்னி.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...
இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது. ஆகவே இயற்கைக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய்நொடி இல்லாமல் வாழமுடிந்தது.
உலகில் உள்ள 84 லட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன. ஆகவே அவைகளுக்கு எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவ மனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தான் அவதிப்பட்டு அடுத்தவரை கஷ்டப்படுத்தி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இவையெல்லாம் இயற்கைக்கும் உடல் தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்க்கை விதித்த தண்டனை. இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும்.
இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து உடல் நலத்திற்கு பாடுபடுவதாலே நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. குறைந்த பட்ச சுகம் கூட அரிதாகிவிட்டது.நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்க்கெல்லாம் மூல காரணம். இவற்றிலிருந்து நாம் வெளிப்பட வேண்டுமெனில் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.
நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் நாம், நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம். இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்.
நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல. நாம் மனம் மாறினாலே இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது...
ஒழுகல் ஓரிடத்தில் இருந்தால் ரிப்பேர் வேறிடத்தில் செய்தால் எப்படி இருக்குமோ அதே போன்றே சாதாரணமாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகள் மீது ஆதாரப்படுவது போலிருக்கும், இயற்கை வாழ்க்கை முறையை விட்டு பல்வேறு வைத்தியங்களை இந்த உடலுக்கு செய்வது.
மனிதன் ஆறறிவு படைத்தவனாதலால் தன் அறிவையும், புத்தியையும் பயன்படுத்தி இயற்கை வாழ்க்கை முறையினால் நல்ல ஆரோக்கியத்தையும், நல்லெண்ணங்கள் கொண்ட மனநிலையையும் நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டால் நம்மில் மனிதாபிமானம் உயர்ந்து கொண்டிருக்கும்.
padichachchchchhch
பதிலளிநீக்குgrrrrr to follow, follow option muthaleye varapala change pannunga.words verification paduthal thangalai :P
பதிலளிநீக்குஅருமை.........
பதிலளிநீக்குThank you Geethaaji. I will remove word verification now.
பதிலளிநீக்குThanks Ulavu.com
Ashvinji.